Posts

Showing posts from February, 2017

பொலிக பொலிக ....

பா ராகவன் எழுதும் பொலிக பொலிக (http://www.writerpara.com/paper/?cat=401)  படித்து வருகிறேன். சிறப்பாக இருக்கிறது. எம்பெருமானார் இராமானுஜரை பற்றிய பல தெரியாத விஷயங்களை படித்து வருகிறேன். இருபத்தி எட்டாம் பகுதியிருந்து ஆரம்பித்தேன். ஈர்க்கப்பட்டு பின்னோக்கி சென்று ஒரே நாளில் முடித்தேன். இப்பொழுது தினமும் படித்து வருகிறேன். அனைவரும் படித்து அறிந்து சுவைக்க வேண்டிய தொடர். யாதவ பிரகாசர் பற்றிய பகுதியை படித்தபோது ஒரு சிறு நெருடல். அத்வைத்தம் குறித்த உரையாடல்கள் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாமோ என்ற எண்ணம். யாதவ பிராகசர் அத்வைதத்தில் பாண்டித்யம் கொண்டிருந்தார். ஆனால் அதில் மலரவில்லை. அதுவே அவர் வஞ்சம் கொள்ள காரணம். அத்வைத்தம் காரணம் என தொனிப்பதாக தோன்றியது. என் வாசிப்பு மயக்கமாகவும் இருக்கலாம்.